விரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம்-அமைச்சர் ஜெயக்குமார்..!

விரைவில் தூத்துக்குடிக்கு சென்று மக்களை சந்திக்க உள்ளோம் என்று தமிழக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை எழும்பூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தூத்துக்குடி விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவுகளை பிறப்பித்தால் அதை தமிழக அரசு செயல்படுத்தும். ஸ்டெர்லைட் உள்ளிட்ட எந்த விவகாரமானாலும், மக்களின் உணர்வுதான் தங்களின் உணர்வு என்றும், ஆலை செயல்படக் கூடாது என்பதுதான் அரசின் நிலைப்பாடு என்றவர் விரைவில் தூத்துக்குடி சென்று மக்களை சந்திக்க உள்ளோம் என்று தெரிவித்தார்.

மேலும், ஸ்டெர்லைட் ஆலை புதுப்பிப்பதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என்பதோடு, இன்று மின் விநியோகமும் துண்டிக்கப்பட்டுள்ளது என்று கூறிய ஜெயக்குமார், எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், எதிரி கட்சித் தலைவர் போல செயல்படக் கூடாது என்று கூறினார்.

Leave a Response