ரஜினியுடன் கூட்டணி சேர்ந்தால் நாசம் தான் ஏற்படும்-சுப்பிரமணியன் சுவாமி…!

படிப்பறிவே இல்லாத ரஜினிகாந்துடன் கூட்டணி வைத்தால் பெரும் நாசம்தான் ஏற்படும் என்று பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி சாடியுள்ளார்.

ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவதாக அறிவித்தார். ஆனாலும் தொடங்கவில்லை. மோடியுடன் இணைந்தால் ரஜினிகாந்த் முதல்வராகிவிடுவார் என இன்னொரு பக்கம் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி கூறிவருகிறார்.

ரஜினிகாந்த் ஆன்மீக அரசியலை பேசுவதால் பாஜகவுடன் கூட்டணி சேருவார் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக ரஜினிகாந்தையும் குருமூர்த்தியையும் சுப்பிரமணியன் சுவாமி தொடர்ந்து சாடி வருகிறார்.

சுப்பிரமணியன் சுவாமி தமது ட்விட்டர் பக்கத்தில் நேற்று, குருமூர்த்தி ஆர்.எஸ்.எஸ். தத்துவவாதி அல்ல. ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் அப்படி ஒரு போஸ்ட்டே இல்லை; வேண்டுமானால் ரஜினிகாந்துக்கு பி.ஆர்.ஓ. என கூறலாம் என கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில் இன்று நியூஸ் 18 டிவி சேனலுக்கு அளித்த பேட்டியில், ரஜினிகாந்த் படிப்பறிவே இல்லாதவர், நடிகர்கள் அரசியலில் கோலோச்சலாம் என்கிற காலம் மலையேறிவிட்டது. இந்த மாதிரி ஆட்களுடன் கூட்டணி வைத்தால் நாசம் தான் ஏற்படும் என சாபமிட்டிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

Leave a Response