“நீட் தேர்வு”க்காக மாணவர்களுக்கு உதவும் பிரபலங்கள்..!

தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு ஒதுக்கப்பட்டுள்ள தேசிய தகுதிகாண் நுழைவு தேர்வு (நீட்) மையங்களை மாற்ற முடியாது என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உறுதியாக தெரிவித்தது. இது தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கும் தடை விதித்தது.

இந்நிலையில் வெளிமாநிலங்களில் தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு உதவ நடிகர்கள் பிரசனா, அருள்நிதி ஆகியோர் முன்வந்துள்ளார்கள்.

நடிகர் பிரச்சன்னா ட்விட்டரில் கூறியதாவது: நீட் தேர்வு எழுதவுள்ள 2 ஏழை மாணவர்களுக்கு அல்லது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் பயணச் செலவுகளை நான் அளிக்கவுள்ளேன். இதுகுறித்த தகவல்களை எனக்கு அனுப்புங்கள். நான் பயணத்துக்கான டிக்கெட்டைப் பதிவு செய்து தருகிறேன் என்று கூறியுள்ளார்.

நடிகர் அருள்நிதி ட்விட்டரில் கூறியதாவது: நானும் அக்ஸஸ் ஃபிலிமும் வெளிமாநிலங்களில் நீட் தேர்வு எழுதவுள்ள 20 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நிதியுதவி அளிக்கத் தயார். தொடர்புக்கு – 9841777077 என்று கூறியுள்ளார்.

நடிகை கஸ்தூரி ட்விட்டரில் தெரிவித்ததாவது: நீட் பாலக்காடு , எர்ணாகுளம் சென்டர்களில் நீட் தேர்வு எழுத வேண்டிய பிள்ளைகளுக்கு தங்கும் இடம் , உணவு ஏற்பாடு செய்து தருகிறேன். உங்கள் ஹால் டிக்கெட், பயணவிபரம் வாட்ஸப்-பில் அனுப்பவும் . தொடர்புக்கு – கஸ்தூரி, ஜெய் 9789895953.

Leave a Response