நீட் தேர்வு விவகாரம்-தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம்..!

இந்த ஆண்டு மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு மே 6 ம் தேதி நடக்கிறது. நெல்லை, கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மாணவர்களுக்கு கேரளாவில் தேர்வு மையம் ஒதுக்கி சிபிஎஸ்இ உத்தரவிட்டிருந்தது.இதனை எதிர்த்து சென்னை வேளச்சேரியைச் சேர்ந்தவர் சென்னை ஐகோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.

இன்று இதனை விசாரித்த ஐகோர்ட், தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே தேர்வு மையம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இதனை பொது அறிவிப்பாக கருதி தமிழக மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையம் தொடர்பான விபரத்தை சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Leave a Response