சேரனின் அடுத்த குறி- ‘ராஜாவுக்கு செக்’..!

பாரதி கண்ணம்மா’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் சேரன். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களை இயக்கியுள்ளார்.

அதன் பின்னர் சொல்ல மறந்த கதை, ஆட்டோகிராப் போன்ற படங்களில் ஹிரோவாக நடித்தார். பின்னர் திருட்டு விசிடிக்களை ஓழிக்கும் முயற்சியில் சி2எச் என்ற நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், அதற்கு மக்களிடத்தில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.

தற்போது சிறிய இடைவெளிக்குப் பிறகு புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த புதிய படத்திற்கு ‘ராஜாவுக்கு செக்’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள். இப்படத்தை சாய் ராஜ்குமார் இயக்கியுள்ளார். தற்போது இப்படத்தின் போஸ்டர் வெளியாகி இருக்கிறது. இந்த போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Response