சின்ன திரையில் மட்டும் அல்ல பெரிய திரையிலும் நடிக்க ஆசை – தெய்வ மகள் “காயத்ரி”

ரேகா கிருஷ்ணா தெய்வ மகள் நெடுந்தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு பரிச்சயமான ஒரு நபர். இவங்க பேரு இப்போ காயத்ரி அப்டின்னு கூப்ட்றவங்க தான் அதிகம்.

ரேகா கிருஷணா பெங்களூரில் பிறந்தவர், கன்னடம், மலையாளம், தமிழ்-னு கிட்டதட்ட 12 வருடமாக 40  தொலைகாட்சி தொடரில் நடித்து கொண்டிருக்கிறார், அவங்க பண்ண எல்லா ரோலும் வில்லதனமானதுன்னு கூட சொல்லலாம் நடிப்பு மட்டும் இல்லாம இவங்க ஒரு நல்ல நடன கலைஞர் மற்றும் புகைப்பட கலைஞர்.

தமிழில் இவர்கள் அறிமுகமான முதல் தொடர் விஜய் டிவி யில் வெளியான பாரிஜாதம்.

என்ன தான் பல தொடர்களில் இவர்கள் நடித்து இருந்தாலும் தெய்வ மகள் புகழின் உச்சம் என்றே சொல்லலாம்.

தனது நடிப்பு சின்ன திரையில் மட்டும் அல்லாது திரைப்படங்களிலும் இருக்க வேண்டும் என்ற ஆசையை அவர் கூறியுள்ளார். கன்னடத்தில் சில படங்களில் இவர் நடித்திருந்தாலும் தமிழ் படங்களில் நடிப்பது தான் தன்னுடைய குறிக்கோள் எனவும் கூறியுள்ளார். நல்ல கதாபத்திரங்கள் வரும்போது அதனை தேர்வு செய்து நடிப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..

Leave a Response