விலைமாதுவுக்கு ஏக கிராக்கி!!

விபச்சாரிகளை சமுதாயம் அவலமாக பார்த்தாலும், நமது நடிகைகளுக்கு அவர்களின் மீது தனி மரியாதையே இருக்கிறது என்று சொல்லலாம். விபச்சாரியாக நடிக்க நமது நடிகைகள் நிறைய பேர் போட்டி போட்டு வருகின்றனர். இதற்கு முன் சிநேகா, அனுஷ்கா போன்ற முன்னணி நடிகைகளும், மற்றும் சில நடிகைகளும் விலைமாதுவாக நடித்துள்ளனர். இந்த பட்டியலில் மேலும் இரண்டு நடிகைகளும் இணைகிறார்கள்.

ஒருவர் கமலஹாசன் மகள், ஸ்ருதிஹாசன். நிகில் அத்வானி இயக்கும் ’டி-டே என்ற இந்தி படத்தில் ஒரு ’ரா’ அதிகாரியை காதலிக்கும் பாலியல் தொழிலாளி கதாபாத்திரத்தில் ஸ்ருதிஹாசன் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் D-Day படத்தின் ஒரு ஃபோட்டோ வெளியானது. அதை பற்றி ஸ்ருதி தனது டுவிட்டர் வலைதளத்தில் “ரசிகர்களின் ஆதரவுக்கு நன்றி. அந்தக் கதாபாத்திரத்தை கஷ்டபட்டு சவாலாக எடுத்து நடித்தேன். அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார். இந்த ஃபோட்டோ வெளியாகி ரசிகர்களிடயே மிகுந்த பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.

மற்றொருவர் ஸ்ரேயா சரண். தெலுங்கில் ’பவித்ரா’ என்ற பெயரிலும், தமிழில் ’பேரு மட்டும் தான் பவித்ரா’ என்ற பெயரிலும் ஒரே நேரத்தில், இரு மொழிகளில் தயாராகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.

குடும்ப சூழ்நிலைக்காக விபச்சாரத்தை தொழிலாக ஏற்றுக் கொண்டாலும், தன்னை நாடி வரும் அரசியல்வாதி மற்றும் கள்ளச்சாமியார்களின் வேஷங்களையும், தேகத்தை விற்கும் விலைமாது எவ்வளவோ மேல் என்று அவர்களை எதிர்த்து போராடும் துணிச்சலான ஒரு பெண்ணின் கதைதான் ’பேரு மட்டும்தான் பவித்ரா’.

இதில் மக்களுக்கு தொண்டாற்ற வேண்டியவர்கள் தவறானவர்களாக இருக்கக்கூடாது என்று, அவர்களின் முகத்திரையை கிழிக்கும், சவாலான கதாப்பாத்திரத்தில் ஸ்ரேயா நடிக்கிறார். எம்.எம்.ஸ்ரீலேகா என்ற பெண் இசையமைப்பாளார் இசையமைக்கிறார். வித்யாசாகர் வசனம் எழுத, கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் ஜனார்த்தன மகரிஷி.