ரசிகர்களுக்கு சூர்யா வலியுறுத்தல்

suriya

தனியார் தொலைக்காட்சியில் இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்தனர். இது மிகுந்த கண்டத்தை சம்பாதித்தது. சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர்.

இந்த பிரச்னையால் கடும் கோபத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள் சூர்யா பற்றி விமர்சித்த தொலைக்காட்சி நிறுவனம் முன்பு போராட்டம் நடத்தியுள்ளனர். இதற்கிடையில் நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்கு எதிர்வினையாற்றி நம் தரத்தை நாம் குறைத்து கொள்ள வேண்டாம்.

உங்களின் நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற என்று பதிவு செய்துள்ளார்.

Leave a Response