அதர்வாவுக்காக வில்லனை தேடிய டைரக்டர்

_Atharva-Murali9463

கவுதம் கார்த்திக் படத்தை இயக்கிய ஆர்.கண்ணன் அடுத்து அதர்வா நடிக்கும் புதிய படத்தை தயாரித்து இயக்க உள்ளார். ஏற்கனவே ‘செம போத ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ படங்களில் அதர்வா நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் வெளிவரவுள்ளது. கண்ணன் இயக்கும் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. இதில் அதர்வாவிற்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடிக்கிறார். வில்லன் கதாபாத்திரத்தில் உபன் படேல் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறும்போது, ‘இப்படத்தின் வில்லன் பாத்திரம் மிக வலுவானது மட்டுமல்ல சவாலானது. பாலிவுட் நடிகர் உபன் படேலை அணுகி அவரிடம் கதை சொன்னபோது உடனே நடிக்க ஒப்புக்கொண்டார். கதை அவ்வளவு பிடித்திருந்தது. வில்லன் வேடங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் அவருக்கு வந்தாலும் இந்த கதைதான் அவரை மிகவும் கவர்ந்துள்ளதாக தெரிவித்தார். இதில் உபன் படேலின் கதாபாத்திரம் தோற்றம் மற்றும் கெட் அப் ஆகியவை பிரத்யேகமாகவும் சுவாரஸ்யமானதாகவும் இருக்கும். கிளைமாக்ஸ் காட்சியில் அதர்வா, உபன் படேலுக்கு இடையில் நடக்கும் சண்டை காட்சி பேசும்படி இருக்கும்’ என்றார்.

ஆர்.ஜே.பாலாஜி, சதிஷ், சுஹாசினி முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘அர்ஜுன் ரெட்டி’ புகழ் ராதன் இசை. பிரசன்னா எஸ்.குமார் ஒளிப்பதிவு. இம்மாதம் படப்பிடிப்பு தொடங்குகிறது.

Leave a Response