பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தென் மண்டல தலைமை இயக்குநராக எம்.வி.வி.எஸ். மூர்த்தி நேற்று பொறுப்பேற்றார்.
இதுவரை தலைமை இயக்குநராக பதவி வகித்த கே.முத்துகுமார் மும்பைக்கு மாற்றம் செய்யப்பட்டதையடுத்து மூர்த்தி இப்பதவியில் நியமிக்கப்பட்டார். இந்திய தகவல் பணியில் 1984-ம் ஆண்டு தொகுப்பைச் சேர்ந்த இவர், சென்னைக்கு வரும்முன் புதுதில்லி, ஐதராபாத், பெங்களூரு ஆகிய இடங்களில் அகில இந்திய வானொலி, விளம்பரம் மற்றும் காட்சி இயக்குநரகம், களவிளம்பர இயக்குநரகம், பத்திரிகை தகவல் அலுவலகம் உள்ளிட்ட மத்திய அரசு ஊடகங்களில் உயர் பொறுப்புகளை வகித்துள்ளார்.