அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. கார் வென்ற காளைகள்..

pic 2

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 – மாலை 5 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. காளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக 1 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது. அலங்காநல்லூரில் 571 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிக்க 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.ஒரே சுற்றில் 8 காளைகளை பிடித்த மாடுபிடி வீரர் அஜய் முதல் பரிசாக ‘ஹேட்ஸ்பேக்’ வகை காரை தட்டிச் சென்றார். ஒரே சுற்றில் 6 காளைகளை பிடித்த, 670-ம் எண் வீரர் மற்றும் 214-ம் எண் வீரருக்கு 2வது இடம் பகிர்ந்தளிக்கப்பட்டது. 11-ம் எண் வீரர் 3வது இடம் பிடித்தார். 9 காளைகள் சிறப்பான காளைகளாக தேர்ந்தெடுக்கப்பட்டன. மேலும் சிறப்பாக காளையை பராமரித்த மதுரையை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கார் பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Response