‘எம்.ஜி.ஆர். அரசியல் பாதை’ நூல் வெளியீட்டு விழா

qqq 2

‘எம்.ஜி.ஆர். அரசியல் பாதை’ என்ற தலைப்பில் நிகழ்கால அரசியல் தலைவர்களுக்கு வழிகாட்டும் விதமாக மூத்த பத்திரிகையாளர் துரை கருணா எழுதிய ‘எம்.ஜி.ஆர். அரசியல் பாதை’ என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நிருபர்கள் சங்க வளாகத்தில் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி நூலை வெளியிட முன்னாள் எம்.எல்.ஏ. பி.எஸ். அண்ணாமலை பெற்றுக் கொண்டார். விழாவில் ‘அமுதகானம்’ ஆதவன், ‘மாலைச்சுடர்’ ஆசிரியர் எம்.சுப்பிரமணியம், ‘புதிய தலைமுறை’ வார இதழின் ஆசிரியர் எம்.பி. உதயசூரியன், பத்திரிகையாளர் சாதிக் பாட்சா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Response