
தோல்வி படம் தான் ஒத்துக்கிறேன். அது ரசிகர்களுக்காக ஜாலியாக பண்ணின படம். அதுக்காக நான் வருத்தப்படல. அடுத்தடுத்த படங்களில் சரியாகிவிடும்.
ஒரு பாகமாக முடிய வேண்டிய படம் சில காரணங்களால் ரெண்டு பாகமாயிடுச்சு. அதனால் கொஞ்சம் செலவானதால புரட்யூசருக்கு கொஞ்சம் மனக்கசப்பு இருந்தது. பிரச்னைகளை படம் நடக்கும்போது சொல்லியிருக்கலாம், அல்லது ரிலீசுக்கு பிறகு சொல்லியிருக்கலாம், ஒரு மாதம் கழித்து சொல்லியிருக்கலாம், 6 மாதத்திற்கு பிறகு யாரோ சொன்னார்கள் என்று சொல்வது தான் வருத்தமாக இருக்கிறது. அதையும் மீறி நான் தவறு செய்திருந்தால் இந்த மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.நான் நல்லவன் என்று எப்போதும் சொல்ல மாட்டேன்.
நான் என்ன தவறு பண்ணினேன் என்று எனக்கு தெரியும். கொஞ்சம் தப்பாயிடுச்சு பரவாயில்லை. நான் இனிமே நடிக்க முடியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். எனக்கு அது பற்றி தெரியவில்லை.
மணிரத்னம் என்னை நடிக்க கூப்பிட்டிருக்கிறார். எந்த நம்பிக்கையில் கூப்பிடுகிறார் என்று தெரியவில்லை.சரி நடிக்க முடிலேன்னா பரவாயில்லை, வேறு ஏதாவது செய்துவிட்டுப் போகிறேன். நான் நடிப்பது நிச்சயம் எனக்காக இல்லை. என் ரசிகர்களை சந்தோஷப்படுத்தத்தான்.

மாதா பிதா குரு தெய்வம் என்பார்கள், நான் இந்த ஆர்டரை மாற்றி பின்பற்றுகிறேன். தெய்வம் தான் முதலில் அதன் பிறகு குரு, அதன் பிறகு தந்தை, இந்த இரண்டும் சேர்ந்து ஒருவராக எனக்கு கிடைத்தது பாக்கியம்”. இவ்வாறு சிம்பு பேசினார். சிம்பு பேசும்போது நடிகர் தனுஷ் அருகில் நின்று கொண்டிருந்தார்.