ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்
கடந்த ஓராண்டாக காலியாக இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. திமுக, அதிமுக வேட்பாளர்கள், சுயேட்சையாக களமிறங்கும் தினகரன் உட்பட 21 பேர் நேற்றுவரை வேட்புமனு தாக்கல் செய்துவிட்டனர்.
ஆர்.கே.நகரில் பாஜக போட்டியிட்டால், நட்சத்திர வேட்பாளர்தான் போட்டியிடுவார் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருந்தார். ஆனால், கடந்த முறை போட்டியிட்ட கங்கை அமரன் இந்த முறை பின்வாங்கிவிட்டார். அவர் மட்டுமல்லாமல் மற்ற சிலரும் போட்டியிட தயங்கினர்.
இதையடுத்து போட்டியிட வேண்டிய கட்டாயத்தில் இருந்த பாஜகவிற்கு வேட்பாளரே கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பாஜக சார்பில் கரு.நாகராஜன் போட்டியிட உள்ளார். ஆர்.கே.நகர் தேர்தலில் பாஜக வேட்பாளர் கரு.நாகராஜன் போட்டியிடுவார் என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.