சென்னையில் நடந்த அதிமுக ஆட்சி மன்ற கூட்டத்தில் மதுசூதனன் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
அதிமுக.,வின் அமைப்புச் செயலாளர், தலைமை நிலையச் செயலர் உள்ளிட்ட பதவிகளில் வகித்தவர். அதிமுக இரு அணியாக இருந்த போது, ஓபிஎஸ் தலைமையிலான அணியில் இருந்தவர் மதுசூதனன். 5 ஆண்டுகளில் 2வது முறையாக அதிமுக அவைத்தலைவராக இருக்கிறார்.
முன்னதாக அதிமுக.,வில் மதுசூதனன், பாலகங்கா உள்ளிட்ட27 பேர் ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போட்டியிட அதிமுக தலைமைக்கு விருப்பமனு விண்ணப்பித்திருந்தனர்.
இந்நிலையில் யார் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஓபிஎஸ் அணியில் இருந்த மதுசூதனன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து அதிமுகவின் மதுசூதனன், திமுகவின் மருது கணேஷ், டிடிவி தினகரன் இடையே போட்டி நிலவும் என தெரிகிறது.