அடித்து கொல்லாத நிலையில் அதிமுக ஆட்சி மன்றக் குழு!

admk

ஆர்.கே. நகர் தொகுதியில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பதில் அதிமுக கோஷ்டிகள் அடித்துக் கொண்டிருக்கின்றன.

மதுசூதனன்:-

இரட்டை இலை கிடைத்துவிட்ட கோதாவில் எப்படியும் இன்னொரு ரவுண்டு வலம் வரலாம் என 80 வயதிலும் துடியாய் துடிக்கிறார் மதுசூதனன். நிச்சயம் ஓபிஎஸ் நம்மை கைவிடமாட்டார் என தளராத நம்பிக்கையுடன் இருக்கிறார் மதுசூதனன்.

kpmathu

ஜெயக்குமார்:-

ஆனால் மதுசூதனன் வெற்றி பெற்றுவிட்டால் அடுத்து அமைச்சர் பதவி கட்டாயம் கொடுக்க நேரிடும்; இது தமது இருப்புக்கே உலை வைப்பதாகிவிடும் என்பதால்தான் அமைச்சர் ஜெயக்குமார் மிகக் கடுமையாக எதிர்க்கிறார். இதை உணர்ந்த ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.பி. முனுசாமி தமக்கு சீட் கேட்டு வருகிறார்.

eps ops2123

 போர்க்கொடி:-

மதுசூதனனுக்கு இல்லையெனில் வன்னியர் வாக்குகள் அதிகம் உள்ள ஆர்.கே.நகர் தொகுதியை எனக்கு தாருங்கள்.. நான் எளிதாக வெல்வேன் என கறார் காட்டுகிறாராம் கேபிமுனுசாமி. அவருக்கு ஆதரவாக மைத்ரேயன் உள்ளிட்டோரும் கச்சைகட்டிக் கொண்டு நிற்கிறார்களாம்.

 

தடுமாற்றம்:-

ஏற்கனவே இணைந்தது போல் இணைத்து ஓரம்கட்டி வைக்கிறார்கள்… இப்போது ஆர்.கே.நகர் தொகுதி வேட்பாளரும் நாமாக இல்லாமல் போனால் நிச்சயம் பூஜ்யம்தான்.. என ஓபிஎஸ்ஸை நச்சரிக்கிறார்கள். ஆனால் ஓபிஎஸ்ஸோ என்னதான் நிலைப்பாடு எடுப்பது என தெரியாமல் தவியாய் தவிக்கிறாராம்.

Leave a Response