வித்யாசாகர் ராவை விசாரிங்க..விசாரணை கமிஷனில் மாணவி நந்தினி அதிரடி கோரிக்கை!

xarumugasamy-nandhini54-23-1511443546.jpg.pagespeed.ic.cDdBnecrD8

 ஜெயலலிதா மரணம் தொடர்பாக தமிழக முன்னாள் பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று முன்னாள் நீதிபதி ஆறுமுகசாமியிடம் ஒரு மனுவை சட்டக கல்லூரி மாணவி நந்தினி அளித்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஒரு நபர் குழுவை தமிழக அரசு நியமித்தது. அவர் கடந்த இரு நாள்களுக்கு முன்பு தனது விசாரணையைத் தொடங்கினார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கலசமஹால் அலுவலகத்துக்கு சென்று திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட்ட சரவணன் ஆஜரான நிலையில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை டீன் நாராயண பாபு, மயில்வாகனன் உள்ளிட்ட அரசு மருத்துவர்கள் ஆஜராகி விளக்கமளித்தனர்.

 

இந்த நிலையில், தமிழக பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவை விசாரிக்க வேண்டும் என்று விசாரணை ஆணையத்தில் சட்டக்கல்லூரி மாணவி நந்தினி மனு அளித்துள்ளார்.

Leave a Response