எதிர்க்கட்சித் தலைவரை கடுமையாக சாடிய கூட்டுறவுத்துறை அமைச்சர் !

Sellur_Raju

கோவையில் கூட்டுறவு வங்கி வாரவிழா நடைபெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு, உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ:-

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பதவி பித்து பிடித்து அலைகிறார். முதல்வராக வேண்டும் என்ற ஆசையில் ஸ்டாலின் ஏதேதோ பேசுவதோடு அரசின் மீது இல்லாத பொல்லாத குற்றச்சாட்டுகளை எல்லாம் கூறிவருகிறார்.

stalin

பதவி பித்து பிடித்துள்ள ஸ்டாலினை அவரது மனைவி நன்றாக பார்த்துக்கொள்ள வேண்டும். அமைச்சர்களை கேவலமாக பேசுவதை ஸ்டாலின் நிறுத்திக்கொள்ள வேண்டும். கேவலமாக பேசுவதையும் பொய்யான குற்றச்சாட்டுகளையும் கூறுவதை விடுத்து ஸ்டாலின் தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்டினால் திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறோம் என செல்லூர் ராஜூ, ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து பேசினார்.

Ministers-saving-Vaigai-dam

முதல்வர் பழனிசாமி தலைமையிலான தமிழக அரசின் மீது எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், கடுமையான குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் முன்வைத்துவரும் நிலையில், அமைச்சர் செல்லூர் ராஜூ அவரை கடுமையாக சாடியுள்ளார்.

Leave a Response