காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது- ராகுல் தலைவராக அறிவிக்கப்படுவாரா!

large_congress-

காங்கிரஸ் கட்சியின் துணை தலைவராக உள்ள ராகுல் காந்தி பதவி உயர்த்தப்பட்டு கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்பதே கட்சியின் மூத்த தலைவர்களின் விருப்பமாகும். கடந்த தீபாவளி பண்டிகைக்கு பிறகு அவர் அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர் என்று அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவித்தன.

soniyag
 ஒரு விழாவில் பேசிய சோனியா காந்தியும் விரைவில் நீங்கள் விரும்பியது நடக்கும் என்று ராகுல் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை சூசகமாக தெரிவித்தார். இந்நிலையில் டெல்லியில் நாளை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது.

சோனியா இல்லத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் கலந்து கொள்கின்றனர். இதில் புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தெரிகிறது.rahug

 

அதைத்தொடர்ந்து, ராகுல் காந்தி தலைவர் பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்வார். அவரை எதிர்த்து யாரும் மனுதாக்கல் செய்யாவிட்டால், ராகுல் ஒருமனதாக புதிய தலைவராக அறிவிக்கப்படுவார். இதனால் நாளை நடைபெறும் இந்த கூட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Leave a Response