ஆந்திராவில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கு ஏற்பட்ட ஆவலம்!

lanjsam

ஆந்திர மாநிலம், விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள வருவாய் துறையில் சர்வே இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் லட்சுமி நாராயணா. இவர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார் எழுந்தது. இந்நிலையில், அவருக்கு சொந்தமான 17 இடங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

 

dogbite

விசாகப்பட்டினத்தில் உள்ள இவரது வீட்டில் சோதனை நடத்த சென்றபோது, அதிகாரிகள் மீது லட்சுமி நாராயணாவின் மகன் நாய்களை ஏவி விட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் அடிப்படையில், போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் லட்சுமி நாராயணாவுக்கு 20-க்கும் அதிகமான அடுக்குமாடி கட்டிடங்கள், நகைகள் என கோடிக்கணக்கில் சொத்துகள் இருப்பது சோதனையில் தெரியவந்துள்ளது.

Leave a Response