மின்பகிர்மான கழக விதிகளை மீறிட யார் காரணம் ? ஸ்டாலின் கேள்வி

mk_stalin

29லட்சம் மின்மீட்டர்கள் கொள்முதலில் அதிக விலைக்கு விற்க முன்வந்த கம்பெனிக்கு டெண்டர் அளித்தது யார் ? என்பது தொடர்பான விளக்கத்தை மின்சார உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் உடனடியாக வெளியிட வேண்டும் என திமுக செயல் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் ஒரு மீட்டரை ரூ.453 க்கு அளிக்க தயார் என தெரிவித்த உத்தரபிரதேச நிறுவனத்திற்கு டெண்டர் மறுத்தது ஏன் ? என்றும் தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழக விதிகளை மீறிட யார் காரணம் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். மின்மீட்டர் கொள்முதலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Response