டெல்லி ரோகினி நீதிமன்ற வளாகத்தில் இரு குழுக்களிடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இம்மோதலின் போது இரு குழுவினரும் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
அதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
டெல்லி நீதிமன்ற வளாகத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.