சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டிவி அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் காலை முதல் அதிரடி ரெய்டு நடத்தி வருகிறார்கள்.
வரி ஏய்ப்பு செய்துள்ளதாக வந்த புகாரை அடுத்து சசிகலா மற்றும் அவரின் உறவினர்களுக்கு தொடர்புள்ள, 20க்கும் மேற்பட்ட இடங்களில் இந்த சோதனை நடைபெற்று வருகிறது. ஜெயா டிவி அலுவலகத்தில் ஐடி ரெய்டு நடந்தபோதிலும், அதன் ஒளிபரப்பில் எந்த தடங்கலும் ஏற்படவில்லை.
ஐடி ரெய்டு நடைபெற்றதை ஜெயா டிவியே பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பியதே இதற்கு சான்று. ‘வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகிறார்கள்’ இவ்வாறு ஜெயா டிவியில் பிரேக்கிங் செய்தி ஓடியபடி இருந்தது.