சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் வீட்டிலும் புகுந்த மழை நீர் !

ops
தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை காரணமாக தமிழக கடலோர மாவட்டங்களில் நேற்று மாலை முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய மழை தொடர்ந்து பெய்ததால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் சூழ்ந்துள்ளது.

இதனிடையே சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வீட்டிலும் மழைநீர் புகுந்தது. தரைதளத்தில் மழைநீர் சூழ்ந்து இருப்பதால் அதனை மோட்டார் மூலம் வெளியேற்றி வருகின்றனர்.

Leave a Response