ஆட்டோ மீது லாரி மோதி 6 பெண்கள் பலி!

auto
ஆந்திரா மாநிலம் கோதாவரி மாவட்டத்தில் ஆலாவரம் கிராமத்திலிருந்து 11 பெண்கள் ஷேர் ஆட்டோவில் வடபள்ளியில் உள்ள பெருமாள் கோயிலுக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பொலக்கோட்டைவாரிபள்ளி அருகே சென்ற போது எதிரே வேகமாக வந்த லாரி ஆட்டோ மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் உயிரிழந்தனர். மீதமுள்ள 5 பேர் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சடலங்களை மீடு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் அப்பகுதியில் 2 மணி நேரத்துக்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Leave a Response