ஜெ உயிருடன் இருந்து இருந்தால் பெருவிழாவாக இருந்து இருக்கும்- பிரபு வருத்தம்!

30625

நடிகர் சிவாஜி கணேசனின் மணி மண்டப திறப்பு விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்காதது சிவாஜி குடும்பத்தினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. நடிகர் சிவாஜி கணேசனின் சிலை, சென்னை மெரினா சாலையில் இருந்து நீதிமன்ற உத்தரவுபடி நீக்கப்பட்டு, அடையாறில் கட்டப்பட்டுள்ள மணி மண்டபத்தில் வைக்கப்பட உள்ளது. மணி மண்டப திறப்பு விழா, அக்., 1ம் தேதி நடக்க உள்ளது. இந்த விழாவில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஜெயக்குமார், கடம்பூர் ராஜு ஆகியோர் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டது. இதற்கு சிவாஜி குடும்பத்தினர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

நடிகர் பிரபு அறிக்கை சிவாஜி கணேசனின் மகனும், நடிகருமான பிரபு வெளியிட்டுள்ள அறிக்கையில்,

26-1440579081-prabhu56

‘ஜெயலலிதா உயிருடன் இருந்து இருந்தால், சிவாஜி மணி மண்டபத்தை அவர் நேரில் சென்று திறந்து வைத்து இருப்பார். ஆனால், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விழாவில் பங்கேற்காதது வருத்தத்தை அளிக்கிறது. இந்த விழாவில், முதல்வர் மற்றும் துணை முதல்வர் பங்கேற்பது குறித்து ஆவண செய்ய வேண்டும். இந்த விழாவை, சிறிய விழாவாக நடந்துவது சிவாஜியை அவமதிப்பாக கருதுகிறோம்’ என, கூறப்பட்டுள்ளது.

Leave a Response