ஆந்திராவில் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் கொள்ளை!

express
ஐதராபாத்தில் இருந்து சென்னை எக்மோர் வரை செல்லும் சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் பயணிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

சமீப காலமாக ஆந்திராவில் இருந்து வரும் ரயில்களில் கொள்ளை சம்பவங்கள் நடப்பது வாடிக்கையாக இருந்து வருகிறது. இதன் சமீபத்திய நிகழ்வாக ஐதராபாத்தில் இருந்து சென்னை வந்த சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் அதிகாலை நேரத்தில் கொள்ளை நடந்துள்ளது. ரயில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தை கடக்கும் போது, மல்யாலா ரயில்நிலையத்தில் கிராசிங்கிற்காக நின்றுள்ளது.

அப்போது ரயிலில் ஏறிய கொள்ளை கும்பல், பெண்களுக்காக ஒதுக்கப்பட்ட எஸ் 1 முதல் எஸ் 5 வரையிலான பெட்டிகளை குறித்து வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது. அதிகாலையில் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் ரயில் பெட்டியில் ஏறிய கொள்ளையர்கள் ஆயுதங்களைக் காட்டி, தங்கம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை கொள்ளயைடித்து சென்றுள்ளனர்.

பயணிகள் அவர்களை பிடிக்க முயன்றும் முடியாததால் கொள்ளையர்கள் தப்பிச் சென்றுள்ளனர். சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கட்சிகுடா ரயில்நிலைய போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். கட்சிகுடா ரயில் நிலையத்தை அடைவதற்கு சிறிது நேரத்திற்கு முன்பே இந்த கொள்ளை சம்பவம் நடந்துள்ளது. தொடர்ந்து கொள்ளைகள் நடந்தாலும் நடவடிக்கை எடுக்காத ரயில்வே போலீசாரின் அலட்சியத்தாலேயே இது தொடர்கதையாகி வருவதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Response