மும்பையில் 4 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து; 7 பேர் உயிரிழப்பு!

mumbai 2
மும்பையில் பைகுலா பகுதியில் உள்ள 4 மாடிக் கட்டிடம் இன்று திடீரென இடிந்து விழுந்தது. மும்பையை புரட்டிப் போட்ட கனமழையால் இந்த கட்டிடம் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

கட்டிடம் விழுந்த உடனேயே தேசிய பேரிடர் மீட்பு குழு சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மொத்தம் 90 தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இடிபாடுகளில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க மோப்ப நாய்களும் வரவழைக்கப்பட்டன. 10 தீயணைப்பு வாகனங்கள், 2 மீட்பு வாகனங்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளன.

இக்கட்டிட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 15 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் சிலரது நிலைமை கவலைக் கிடமாக உள்ளது. ஆகையால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Response