பதிலுக்கு பதில்! தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களும் டெல்லி செல்ல திட்டம்

dinakaran t

தலைமை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாணப் பத்திரங்களை வாபஸ் பெற எம்.எல்.ஏ.க்களிடம் கையெழுத்து பெற்று விட்டதாகவும், தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரங்களை இருவரும் திரும்பப் பெறுகின்றனர்.

தற்போது இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்து விட்ட நிலையில் சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைக்க முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதை அடுத்து நாளை டெல்லி செல்ல உள்ளனர்.

தலைமை தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட பிரமாணப் பத்திரம் திரும்ப பெறுவதால், டிடிவி தினகரனுக்கு மறைமுக நெருக்கடி கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் நாளை டெல்லி பயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி எங்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். இதனால் சட்டசபையை கூட்ட ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என குடியரசு தலைவரிடம் வலியுறுத்த முடிவு செய்துள்ளனர். டிடிவி தினகரன் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.

Leave a Response