எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் நாளை டெல்லி பயணம்!

opseps

தனித்தனி அணியாக செயல்பட்ட கதை:-

ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க. புரட்சி தலைவி அம்மா அணியும், முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அ.தி.மு.க., அம்மா அணியும் செயல்பட்ட போது, இரண்டு அணிகளின் சார்பிலும், பல லட்சக்கணக்கான பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இதில், முதல்வர் பழனிசாமி தலைமையிலான அணி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரங்களில்,கட்சியின் பொதுச் செயலாளராக சசிகலாவும், துணை பொதுச் செயலாளராக தினகரனும் செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.

thirthl

தற்போது இரண்டு அணிகளும் ஒன்று சேர்ந்து விட்டன. சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைக்க முடிவும் எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே தாக்கல் செய்த பிரமாண பத்திரங்களை வாபஸ் பெற இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால் முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் நாளை டெல்லி செல்கின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

Leave a Response