எடப்பாடி அணியிடம் சரணடைந்த தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ!

thoppu vengadachalam

புதுச்சேரி சொகுசு பங்களாவில் தங்கியிருக்கும் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் குறைவதுமாக இருகின்றது.

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு நிலவி வரும் நிலையில் ஒவ்வொரு எம்.எல்.ஏக்கள் பங்கும் ஆட்சியாரிடம் செல்லப்போகிறது என்பதை தீர்மானிக்கும் விதமாக அமைந்துள்ளது.

இந்நிலையில், ஆரம்பம் முதலே சசிகலா குடும்பத்திற்கு ஆதரவு அளித்து வந்த பெருந்துறை சட்ட மன்ற உறுப்பினரும், முன்னாள் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலம் அதிரடியாக எடப்பாடி பழனிசாமியிடம் சரணடைந்தார்.

இதனை தொடர்ந்து, செய்தியாளர்களிடம் இன்று பேசிய தோப்பு வெங்கடாசலம்:-

அதிமுக ஆட்சி நீடிக்க வேண்டும் என்பதற்காகவே, தாம் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்தார்.

இதே போன்று சில நாட்களுக்கு முன்பு தினகரனுக்கு ஆதரவு அளித்து வந்த திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ போஸ், இபிஎஸ் க்கு ஆதரவு அளித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response