திருவாரூர் கோவிலை சுற்றிய ஸ்டாலின்!

ther
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரியில் மறைந்த திமுக மாவட்ட முன்னாள் செயலாளர் பூண்டி கலைச்செல்வன் மகள் திருமண விழாவில் கலந்துகொள்ள (சனிகிழமை) மாலை திருவாரூர் சென்றார் ஸ்டாலின். அதைதொடர்ந்து திருவாரூரில் உள்ள முரசொலி நாளிதழின் முதல் அச்சுப் பிரதியினை வெளியிட்ட அச்சகத்துக்கு சென்று அதன் உரிமையாளர்களை சந்தித்து, முரசொலி பவள விழாவின் நினைவு பரிசுகளையும் விழா மலர்களையும் வழங்கினார்.

பின்னர் கட்டி முடிக்கப்படாத திருவாரூர் புதிய பேருந்து நிலையம், காட்டூரில் திமுக சார்பில் தூர் வாரிய குளத்தையும் மு.க. ஸ்டாலின் பார்வையிட்டார். திருவாரூர் கொரடாச்சேரியில் தியாகராஜர் கோயில் சன்னதி தெருவிலுள்ள வீட்டில் தங்கினார். இந்நிலையில், நேற்று அதிகாலை திருவாரூர் தெற்கு வீதி, வடக்கு வீதி உள்ளிட்ட பகுதிகளில் ஸ்டாலின் நடைபயிற்சியில் ஈடுபட்டார். அப்போது, தியாகராஜர் கோயில் விட்ட வாசல் கோபுரம் அருகில் உள்ள பழைமையான கல்தேரை பார்வையிட்டார். மேலும், பொதுமக்கள் சிலருடன் பேசினார்.

பின்னர், சாலையோரத்தில் ஒரு தேநீர் கடையில் தேநீர் குடித்து விட்டு வீட்டுக்கு சென்றார். நடைபயிற்சியின்போது, முன்னாள் அமைச்சர் எ.வ. வேலு உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

Leave a Response