உலக பாட்மிண்டன் சேம்பியன்ஷிப் போட்டியில் இறுதி சுற்றுக்கு முன்னேறிய பி.வி.சிந்து !

pvs
ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில் உலக பாட்மிண்டன் சேம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற பெண்களுக்கான இரண்டாவது அரையிறுதி போட்டியில் 4வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் முன்னணி பாட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து 10வது இடத்தில் உள்ள சீனாவின் சென் யூபே-வை எதிர்கொண்டார்.

ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே அதிரடியாக ஆடிய சிந்து 21-13, 21-10 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார். இந்த போட்டியில் சீனாவை சேர்ந்த சென் யூபே-வை சிந்து 48 நிமிடத்தில் வெற்றி பெற்றார். இறுதி ஆட்டத்தில் சிந்து ஜப்பானின் நசோமி ஒகாராவை சந்திக்கிறார். இந்த போட்டியில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் வெள்ளி பதக்கம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. இது இவரது 3-வது பதக்கமாகும்.

ஏற்கனவே 2013 மற்றும் 2014-ல் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சிந்து வெண்கலப் பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Response