நெடுவாசல் போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய மாநில அரசுகள்!

neduvasal

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசல் உள்பட நாடு முழுவதும் 31 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க மத்திய அரசு அனுமதி வழங்கியது. இதனைக் கண்டித்தும், ஐட்ரோகார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 100-நாள்களுக்கு மேலாக போராடும் மக்களைக் கண்டுக்கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் ஆலங்குடி அருகேயுள்ள நெடுவாசலில் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி நெடுவாசலில் மக்கள் தங்களது இரண்டாம் கட்ட போராட்டத்தைத் தொடங்கினர். நெடுவாசல் நாடியம்மன் கோயில் அருகே நேற்று நடைபெற்றப் போராட்டத்தில், ஐட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி போராடினர்.

திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

இதில் விவசாயிகள், மக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

Leave a Response