2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்க ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்ற நஸ்ரியா என்கிற திருநங்கை சான்றிதழ் வழங்கியும் நிராகரிக்கப்பட்டது. இது தொடர்பாக திருநங்கை நஸ்ரியா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடுத்திருந்தார்.
அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அதை விசரித்த உயர்நீதிமன்றம் மதுரைக்கிளை நீதிபதி இந்த 2ம் நிலை காவலர் உடற்தகுதி தேர்வில் பங்கேற்கலாம் என்று உத்தரவிட்டுள்ளார்.