ஆளுநருடன் டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் சந்திப்பு!

aalunar

காலை சரியாக 10 மணிக்கு தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் ஆளுநர் மாளிகைக்குள் சென்றனர். ஆளுநர் வித்யாசாகர் ராவுடனான இந்த சந்திப்பு சுமார் 15 நிமிடங்கள் வரை நீடித்ததாக தெரிகிறது. அப்போது ஆளுநரிடன் தங்களது கோரிக்கை கடிதத்தை அளித்தனர்.

முதலமைச்சரை மாற்றக் கோரி ஆளுநரிடம் மனு அளித்துள்ளோம் என்று எம்.எல்.ஏ. தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

எம்.எல்.ஏ. ஜக்கையன் கூறுகையில், ஆட்சியை கவிழ்ப்பது எங்கள் நோக்கம் அல்ல. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது, எங்கள் பலம் இன்று தெரியவரும் என்று கூறினார்.

இதற்கிடையே, பன்னீர்செல்வம் ஆதரவு அதிமுக எம்.பி.யான மைத்ரேயன் ஆளுநரை சந்திப்பதற்காக கவர்னர் மாளிகைக்குள் சென்றார்.

Leave a Response