தமிழ்நாட்டில் போதைப் பொருளான குட்காவை விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தடையை மீறி கள்ளத்தனமாக கடத்தி வரப்பட்டு, குட்கா ஆங்காங்கு விறகப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஓசூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, ஒரு வேனில் 47,000 பாக்கெட்டுகள் குட்கா அட்டைப்பெட்டிகளில் அடைத்துவைக்கபபட்டு கொண்டு வரப்பட்டது. இதன் மதிப்பு 1.50 லட்சம் ரூபாய் என கூறப்படுகிறது.
அதனை பெங்களூரில் இருந்து மயிலாடுதுறைக்கு, நாகையைச் சேர்ந்த சீனிவாசன் மற்றும் முனிஸ்வரன் என்கிற இருவர் கொண்டு சென்றுள்ளனர். அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், குட்கா ஏற்றிவந்த வேனையும் பறிமுதல் செய்தனர்.