சசிகலாவை நீக்கும்வரை இணைப்பு சாத்தியமில்லை! -கே.பி. முனுசாமி டெரர் பேட்டி..

KP-Munus+GBT14R58G.3
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட கூட்டம் இன்று நடந்தது. இதில், டிடிவி தினகரனை கட்சியில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை முதலமைச்சர் அறிவித்தார்..

அதிமுகவில் இருந்து டிடிவி நீக்கப்பட்ட நிலையில், சென்னை, கிரீன்வேஸ் சாலையில், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கே.பி.முனுசாமி, மாபா பாண்டியராஜன், மதுசூதனன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டர்.

கூட்டத்திற்குப் பிறகு கே.பி. முனுசாமி செய்தியாளர்களிடம் பேசியபோது ‘’ இப்போதுதான் எடப்பாடி பழனிசாமி அணியினர் விழித்துள்ளார்கள். தினகரனோடு சசிகலா குடும்பத்தினர் அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று மீண்டும் நாங்கள் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்றார்.

நாங்கள் அறிவித்தபடி நடைபெற்று வரும் தர்மயுத்தத்தில், ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை, சசிகலா மற்றும் குடும்பத்தினர் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் ஆகிய இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட்டால்தான் இரு அணிகளும் இணையும் என்று கூறினார்.

Leave a Response