“இந்த செருப்பு உங்க மனச இழுத்துப் பிடிக்கும்!” – ‘என் ஆளோட செருப்பக் காணோம்’ பட இயக்குநர் ஜெகன்நாத்

aananthi

அறிமுக நாயகன் தமிழ், ‘கயல்’ ஆனந்தி ஜோடிசேர்ந்துள்ள படம் ‘என் ஆளோட செருப்பக் காணோம்’.

இவர்களுடன் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு, பாலசரவணன்,லிவிங் ஸ்டன், ரேகா, சிங்கம்புலி, ஜெயப்பிரகாஷ்,தளபதி தினேஷ் உள்பட பலர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ஜெகன்நாத்.

தலைப்பு பற்றி இயக்குநர் கூறுகையில்:-

“ஒரு படத்தை ரசிகர்கள் பார்க்கிறார்களோ இல்லையோ,அவர்கள் மனதில் படத் தலைப்பு நச்சென்று உட்கார வேண்டும்.அத்தலைப்பு குறித்து ஏதேனும் விவாதம் நடக்க வேண்டும்.

seruppu

எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது நமதுகாலணியைத் தொலைத்திருப்போம். அதற்காக வருத்தப்பட்டும்இருப்போம். இந்தத் தலைப்பை உச்சரிப்பதன் மூலம்ஒவ்வொருவருமே தங்கள் வாழ்க்கையில் கிடைத்த அத்தகையஅனுபவத்தை மீண்டும் அசைபோட முடிகிறது.

பழைய செருப்பு தானே என்று கடந்து போக விடாமல் ஏதோஒன்று உங்களது மனதை இழுத்துப் பிடிக்கும். அதைத் தான்இந்தப் படம் அலசப் போகிறது” என்கிறார் ஜெகன்நாத்.

இவர் ஏற்கெனவே ‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’,‘ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களை இயக்கி உள்ளார்.

Leave a Response