நாட்டின் துணை ஜனாதிபதிக்கான தேர்தல் வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி நடக்கிறது. தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்த வெங்கையா நாயுடு தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து இன்று அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக இவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
ஏற்கனவே ஜவுளித்துறை அமைச்சராக இருக்கு ஸ்ம்ருதி இராணியிடம் மத்திய தகவல் மற்றும் தொலை தொடர்புத்துறை கூடுதல் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.
ஏற்கனவே மத்திய கிராம வளர்ச்சித்துறை அமைச்சராக இருக்கும் நரேந்திர சிங் தோமரிடம் மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை கூடுதல் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டது.
இன்று பிரதமர் மோடி நியமனம் செய்தார்.