மக்களுக்காக தான் சினிமா, சினிமாக்காக மக்கள் அல்ல! தயாரிப்பாளர் அடிச்ச பன்ச்…

Kootaththil Oruthan SR Prabhu
பத்திரிகையாளர் ஞானவேல் இயக்க, ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.ஆர்.பிரபு மற்றும் எஸ்.ஆர்.பிராகாஷ் பாபு தயாரித்து ஜூலை 28 அன்று வெளிவரவுள்ள திரைப்படம் “கூட்டத்தில் ஒருத்தன்”. இத்திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

அந்த சந்திப்பின் போது பேசிய படத்தின் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கூறியதாவது, “கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் இதுவரை யாரும் பேசாத மிடில் பெஞ்சர்ஸ் வர்கத்தை பற்றி பேசும் படமாகும். இந்த படத்தின் கதை கேட்டதும் நிச்சயம் இந்த படத்தை தயாரிக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம். பல பிரச்சனைகளை தாண்டி, தடைகளை தாண்டி கூட்டத்தில் ஒருத்தன் திரைப்படம் வருகிற ஜூலை 28 ஆம் தேதி வெளியாக உள்ளது. தற்போது தயாரிப்பாளர்கள் தான் படத்தை வெளியிட சண்டை போடுகிறார்கள். மக்கள் யாரும் தியேட்டருக்கு வந்து படத்தை பார்க்க தயாராக இல்லை. ‘மக்களுக்காக தான் சினிமா , சினிமாக்காக மக்கள் அல்ல’ என்று நச்சுனு ஒரு பன்ச் வெச்சிட்டு தன்னுடைய உரையை முடித்தார் எஸ்.ஆர்.பிரபு.

Leave a Response