தலைமறைவான தாடி பாலாஜி: தேடும் போலீசார்!

baalaji 3
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்தவர் பாலாஜி. இவருக்கும் இவரது இரண்டாவது மனைவிக்கும் ஏற்பட்ட குடும்ப சண்டையில், அவரது இரண்டாவது மனைவி நித்யா மாதவரம் காவல் நிலையத்தில், ‘பாலாஜி என் சாதிப் பெயரைச் சொல்லி இழிவாகத் திட்டுகிறார், தினமும் குடித்துவிட்டு வந்து அடிக்கிறார்’ என புகார் கொடுத்தார்.

ஆனால் அந்த புகார் மீது போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்காததால், காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் மனைவி புகார் கொடுத்தார். அதனையடுத்து தாடி பாலாஜி மீது பெண்கள் வன்முறை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், மூன்று சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

போலீசார் அவரை தேடி வரும் நிலையில், தலைமறைவாகியுள்ள தாடி பாலாஜி, முன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். ஆனால் பெண்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு ஜாமீன் கிடைக்க வாய்ப்பில்லை என போலீசார் கூறுகின்றனர்.

Leave a Response