ஆந்திர ஸ்ரீசைலத்தில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிய 6 பேர் சாலை விபத்தில் பலி!

cars3
திருச்சியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் அனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு காரில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, கரலிதின்னே என்ற இடத்தில் அவர்கள் வந்த காரின் பிரேக் செயலிழந்ததால், கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத் தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் ஜோதி லட்சுமி, சிந்து கார்த்திகா என்ற மூன்று பெண்களும் வனிதா என்ற 8 வயதுச் சிறுமியும் உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 6 பேருக்கு அனந்தபுரத்தில் உள்ள எஸ்.பி.மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்விபத்து குறித்து அனந்தபுரம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Leave a Response