அடித்து துன்புறுத்துவதாக நடிகர் தாடி பாலாஜி மீது இரண்டாவது மனைவி காவல்துறை ஆணையரிடம் புகார்.

baa 2
நகைச்சுவை நடிகர் பாலாஜி (43), இவருடைய மனைவி நித்யா (30). இருவருமே 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், பாலாஜிக்கும், நித்யாவுக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இதனால் பாலாஜியின் மனைவி மாதவரம் போலீசில் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில் பாலாஜி தன்னை சாதிப்பெயரை சொல்லி திட்டுவதாகவும், கொடுமைப்படுத்துவதாகவும் கூறப்பட்டு இருந்தது.

இந்நிலையில், மீண்டும் நடிகர் தாடி பாலாஜி மீது அவருடைய மனைவி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். ஏற்கனவே போலீசில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த நித்யா, இன்று ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார். ஏற்கனவே திருமணம் ஆனதை மறைத்து பாலாஜி தன்னை திருமணம் செய்ததாகவும் அதைப்பற்றி கேள்வி கேட்டதற்கு தகாத வார்த்தைகளால் திட்டுவதாகவும், அடித்து உதைப்பதாகவும், மேலும் தன்னை பலபேருடன் தொடர்பு படுத்தி பேசி சித்ரவதை செய்வதாக புகாரில் தெரிவித்துள்ளார் நித்யா.

Leave a Response