ஆபாச படத்தை காட்டி மாணவிகளிடம் தவறாக நடந்த ஆசிரியர் கைது!!

schools
நீலகிரி மாவட்டதில் உள்ள காட்டபெட்டு கிராமத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (வயது 42) திருப்பூர் மாவட்டத்தில் குரும்பபாளையத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். தான் வேலை செய்யும் பள்ளியில் உள்ள சிறுமிகளை கட்டாயப்படுத்தி ஆபாசப்பட வீடியோக்களை காட்டி அவர்களிடம் முறை தவறி நடந்து வந்துள்ளார்.

இதனால் பாதிக்கப்பட்ட 3 ஆம் வகுப்பு மாணவி தன் தாயிடம் இதுபற்றி கூறியிருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுமியின் குடும்பத்தினர் பள்ளிக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக அடித்து துவைத்தனர். இதைத் தொடர்ந்து காவல்துறை இன்ஸ்பெக்டர் நிர்மலா சம்ந்தப்பட்ட ஆசிரியரை கைது செய்தார். காவல்துறையினர் மற்றும் குழந்தை நலவாரிய அதிகாரிகளும் இந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தினர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது.

கழிவறைக்கு செல்லும் வழியில் மாணவிகளை மடக்கி அவர்களை பின்தொடர்ந்து சென்று கட்டாயப்படுத்தி ஆபாசபட்டத்தை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் பல்வேறு மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல்துறையினர் மற்றும் குழந்தை நலவாரிய அதிகாரிகள் இந்த வழக்கை பதிவு செய்தனர். அவிநாசி நீதிமன்ற நீதிபதி முன்பு கிருஷ்ணமூர்த்தி ஆஜர்படுத்தப்பட்டார்.

Leave a Response