சென்னை வண்டலூரில் உள்ள தமிழ்நாடு காவல் உயர் பயிற்ச்சியகத்தில் இன்று தமிழகக் காவல் குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை இந்த ஆண்டு நடந்த 61வது மாநில அளவிலனா காவல் பணித்திரனாய்வுப் போட்டியில் 11 போலீஸ் சரகங்கள், 6 மாநகரங்கள் மற்றும் 7 சிறப்பு பிரிவுகளைச் சேர்ந்த 152 பெண்கள் உட்பட 773 காவலர்கள் முதல் ஆய்வாளர்கள் வரை பங்கேற்றுள்ளனர்.
இதில் சென்னை மாநகர காவல்த்துறையின் குழுவினர் 7 தங்கம், 5 வெண்கலம் மற்றும் 5 கேடயங்களும் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பெற்றுள்ளனர். இந்த பரிசு பெற்றவர்களுக்கு சென்னை காவல் ஆணையர் திரு. அ.கா. விஸ்வநாதன், இ.கா.பா. அவர்களும் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.