‘தடம்’ படத்தின் படப்பிடிப்பை தொடங்கி வைத்த இயக்குனர் ஹரி…

thadam_3177022f
‘குற்றம் 23’ படத்தைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கினார் அருண் விஜய். ‘தடம்’ என பெயரிடப்பட்ட இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.

இந்தர்குமார் தயாரிக்கவுள்ள இப்படத்தில் 2 நாயகிகள் நடிக்கவுள்ளனர். இதற்கான தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், சென்னையில் ஜூன் 19-ம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. படப்பூஜையுடன் தொடங்கப்பட்ட இதன் படப்பிடிப்பை இயக்குநர் ஹரி தொடங்கிவைத்தார்.

அதிக பொருட்செலவில் உருவாகவுள்ள இப்படத்தில் அருண்விஜய் 2 வேடங்களில் நடிக்கவுள்ளார் . பெப்சி விஜயன் மற்றும் மீரா கிருஷ்ணன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

Leave a Response