ஐந்தே நிமிடங்களில் நிறைவு பெற்ற தீபாவளி சிறப்பு ரயில் முன்பதிவு டிக்கெட் !..

train245171
2017ம் ஆண்டிற்கான தீபாவளிப் பண்டிகை அக்டோபர் மாதம் 18ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதற்காக வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக சிறப்பு ரயில்களின் முன்பதிவு இன்று (ஜூன் 18) துவங்கப்படுகிறது.

சென்னையில் லட்சக்கணக்கான வெளியூரை சேர்ந்தவர்கள் பணி நிமித்தமாக தங்கி பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டிகை நாட்களில், அவரவர் சொந்த ஊருக்கு செல்ல ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் படையெடுப்பது வழக்கம்.

இந்த வகையில், தீபாவளிக்காக வெளியூர் செல்லும் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது.சென்னை எழும்பூர், சென்டர் உள்ளிட்ட முன்பதிவு நிலையங்களில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் அக்டோபர் 16-ம் தேதி பயணம் செய்வோருக்கான சிறப்பு ரயில் முன்பதிவு துவங்கிய ஐந்தே நிமிடத்தில் டிக்கெட்டுக்கள் விற்று தீர்ந்தனர். மேலும் நாளை அக்டோபர் 17-ம் தேதிக்கான முன்பதிவு, நாளை மறுநாள் அக்டோபர் 18-ம் தேதிக்கான முன்பதிவு துவங்க உள்ளது. இதனிடையே பெரும்பாலான பயணிகள் இணையதளம் மூலமாக ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.

Leave a Response