மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் பலி

polis
அமெரிக்காவில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். மேலும், 2 பேர்
படுகாயமடைந்துள்ளனர் காயமடைந்த 2பேர் மருத்துவமனையில் அனும்கதிக்கப்பட்டுள்ளனர்.

அங்குள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் புதன் கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அந்நகரின் பார்சல் சர்வீஸ் அலுவலகத்தின் முன் பணியாளர் ஒருவர் திடீரென நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் பலியாகினர். 2பேர் காயத்துடன் மருத்துவமனையில் உள்ளனர்.

மேலும், துப்பாக்கிச் சூட்டை நடத்திய நபரும் தன்னை தானே சுட்டுக் கொண்டு இறந்துள்ளார்.இது மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி போலீசார் கூறுகையில்,’’துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட நபர் பற்றிய விவரத்தை தற்போது கூற முடியாது.என்றும் இதை பற்றி இன்னும் தீவிர விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது,” என்றார்.

Leave a Response