வெளியாகியது எய்ம்ஸ் நுழைவுத் தேர்வு முடிவுகள்…

aiims
இந்திய அளவில், டெல்லி, போபால், புவனேஷ்வர், ஜோத்புர், பாட்னா, ராய்ப்பூர், ரிஷிகேஷ் ஆகிய 6 இடங்களில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள 700 மாணவர் சேர்க்கையிடங்களுக்கான நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 28ம் தேதி நடத்தப்பட்டது.

மொத்தம், 3,64,242 பேர் விண்ணப்பித்த நிலையில், அவர்களில் 2,84,737 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர். யூனியன் பிரதேசங்கள் உள்பட நாடு முழுவதும் 537 மையங்களில் இந்த தேர்வு நடைபெற்றது.

இதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. ஆண்கள், பெண்கள் என மொத்தம் 4,905 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி, 700 பேரை இறுதியாக தேர்வு செய்து, எய்ம்ஸ் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை வழங்கப்பட உள்ளது. இதுபற்றிய கூடுதல் விவரங்கள் www.aiimsexams.org என்ற முகவரியில் தரப்பட்டுள்ளது.

முதல்முறையாக, டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவக் கல்வி மையத்தில், 100 மாணவர்களை சேர்க்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Response